Puthaga Vanam
புத்தகங்கள் வனத்திலிருந்து பிறந்தவை. அவை நம்முடன் நேரடியாகப் பல கதைகளைக் கொண்டு உரையாடினாலும், ஒவ்வொரு புத்தகமும் தனக்குள் ஒரு பெருங்காட்டின் பழங்கதையை மெளனமாகத் தேக்கி வைத்திருக்கிறது. புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டும் போது, தாளின் விளிம்பு நுனிகளின் கூர்மையைக் கண் மூடி விரல்களால் வருடிப் பாருங்கள். அவற்றில் மலையின் குளிர் இறங்கி, பனிக்கட்டியாலான கூர் கத்திபோல் உறைந்து இறுகி இருப்பதை உணரமுடியும்.
என் பெயர் ஜெயந்த். நான் கொண்டாடும் சிநேகிதர்கள் என் புத்தகங்கள். புத்தக வாசிப்பில், சுற்றி உள்ள ஒலிகளையும் ஒளிகளையும் தொலைத்து வேற்று உலகங்களில் அலைந்து திரியப் பிடிக்கும். கொஞ்சம் எழுதவும் பிடிக்கும். ''புத்தக வனம்" எனும் என் யூ ட்யூப் சேனல் வழியாக உங்களுடன் நானும், நான் ரசிக்கும் புத்தகங்களும் இணைந்து பயணிப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. இதோ, இந்த அடர் வனத்தின் வாயில் கதவுகள் திறந்தாயிற்று. உள்ளே தொலை தூரத்தில் காட்டின் இருண்ட கனத்த மடியில் அமர்ந்தபடி ஒரு முதிர்ந்த புத்தகம், தன் மெல்லிய குரலில் கனிவுடன் நம்மைப் பார்த்து "உள்ளே வா" என்கிறது.Vlog & Lifestyle
Education
Performance Overview
Avg. Daily Views
(Shorts)
Avg. Daily Views
(Videos)
Avg. Views per
Shorts
Avg. Views per
Video
Algorithm Score
Engagement Rate
Subscriber Activity Rate